தமிழ்நாடு

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!
நாளை வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. உயர்கல்வியில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் தேவைப்படும் நிலையில், தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். எப்போதும் மே 2 வாரத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள், இம்முறை முன்கூட்டியே அதாவது, நாளை ( மே.6 ) தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.