ஐடி நிறுவன ஊழியர் மர்மமான முறையில் நேற்று (ஜூ.6) வீட்டில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், குற்றவாளியான அப்பெண்ணின் முன்னாள் காதலரான மருத்துவர் சந்தோஷ் குமாரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நகைக்காக, இளம்பெண்ணின் தற்போதைய காதலர் பாலமுருகன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை சென்ற நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர்கள் பாஸ்கர்- வரலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு நித்யா (26)என்ற மகளும், தமிழ்செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். நித்யா அம்பத்தூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் அம்பத்தூரில் அறை எடுத்து லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பெற்றோர் வர இருப்பதாகவும் அதனால் வீட்டிற்கு வர வேண்டாம் என நித்யா பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், மீண்டும் பாலமுருகன் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்தபடியே நித்தியா மயக்க நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு நித்தியாவை பாலமுருகன் அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருந்ததால் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நித்தியாவின் உடலை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே நித்யாவிடம் இருந்த 25 சவரன் நகைகளை காணவில்லை எனவும், அவரை காதலித்து வந்த பாலமுருகன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் நித்தியாவின் பெற்றோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாலமுருகன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பணம் பிரச்சனை தொடர்பாக நித்யா மற்றும் அவரது பெற்றோருக்கு இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் வரும் எனவும் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நித்யா ஃபோனை எடுக்காததால் தான் வீட்டிற்கு வந்து பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் நித்தியா பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது கடைசியாக நித்தியா ஒருவரிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த நபரை போலீசார் விசாரணை செய்த போது அவர் மருத்துவரான சந்தோஷ்குமார் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ந்து மழுப்பலாகவே பதில் கூறி வந்ததால் போலீசாரின் பாணியில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நித்யா மேக்-அப் ஆர்டிஸ்டாக பணியாற்றிக்கொண்டு, ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி பலரை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடியோ காலில் பேசி நித்யா பணப்பறிப்பில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடன் பழகும் நபர்களை பார்ட்டி, பப் போன்று அழைத்துச் சென்று மது அருந்துவதும் தெரியவந்துள்ளது.
இதே போல், தன் நண்பரின் திருமணத்தில் மருத்துவர் சந்தோஷ்குமார் நித்யாவை சந்தித்ததும், அப்போது நித்யாவிற்கு மீது காதல் வயப்பட்டதாகவும், தொலைப்பேசி எண்ணை வாங்கி கொண்டு வாட்சப் வீடியோ கால் மூலமாக பேசி நெருக்கமாகி, பின்னர் லிவிங் டூ கெதரில் சில நாட்கள் வாழ்ந்ததாகவும் தெரிகிறது. பின்னர் வேறு ஒருவரோடு நித்யாவிற்க்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனை கேட்டப்போது தகராறு ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்ற போது தன்னைவிட்டு விட்டு அந்த நபரோடு செல்வதாக கூறியதாகவும், சிறிது நாட்களிலே சந்தோஷை மறக்க முடியவில்லை என அந்த நபரிடம் பழகுவதை விட்டு விட்டு தன்னோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், நித்தியாவின் நடவடிக்கை பிடிக்காமல் விலகிய போது தன்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கியதாகவும், தன்னோடு நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் எனவும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அதனால் மாதம், மாதம் எனது சம்பளத்தில் பெரும்பகுதியை பெற்று செல்வதை வழக்கமாக்கி கொண்டதாகவும், சமீபத்தில் பேசும் போது உனக்கு திருமணம் ஆனாலும், உன்னை விட மாட்டேன் எனக்கூறியதால், நித்யஸ்ரீ கதையை முடிக்க திட்டமிட்டு அவரோடு கடைசியாக ஒன்றாக இருக்கலாம் எனக்கேட்டு நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து இருவரும் ஒன்றாக இருந்த பின் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, வோட்காவில் தான் கொண்டு வந்த மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டு, தான் மாத்திரை கலக்காத வோட்காவை குடித்ததாகவும், பின்னர் நித்யஸ்ரீ மசாஜ் செய்யக்கூறியதாகவும் அவருக்கு மசாஜ் செய்து கொண்டே உன்னை உண்மையாக நம்பிய தன்னை ஏன் ஏமாற்றினாய் , பிளாக்மெயில் செய்கிறாய் எனக்கேட்ட போது உன்னை விடமாட்டேன் எனக்கூறியதால் பின்னந்தலையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் படுக்கைக்கு அருகே லாக்கர் இருந்த நிலையில் நித்யாவின் கைகளை வைத்தே லாக்கரை திறந்து நகைகளை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பியதாகவும், பின்னர் தான் தனது வீட்டின் அருகே வசிக்கும் முஜிபர் என்பவரிடம் கட்டை பையில் நகையை துணியில் சுற்றி அவரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவித்தார். முஜிபருக்கு தான் கொலை செய்தது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் முஜிபரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடைசியாக நித்யஸ்ரீக்கு சந்தோஷ் எண்ணில் மட்டுமே அழைப்பு சென்றதின் அடிப்படையில் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டதாகவும், ஆனால் சிசிடிவில் சிக்கி கொண்டவரை மீண்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரித்த போது உண்மையை ஒப்புகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலை செய்யும் போது நித்யா சந்தோஷ்குமாரின் கையில் கடித்த காயமும் இருந்ததால் போலீசார் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.
நித்யா தொடர்ந்து, பணப்பறிப்பில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர்கள் பாஸ்கர்- வரலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு நித்யா (26)என்ற மகளும், தமிழ்செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். நித்யா அம்பத்தூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் இருவரும் அம்பத்தூரில் அறை எடுத்து லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பெற்றோர் வர இருப்பதாகவும் அதனால் வீட்டிற்கு வர வேண்டாம் என நித்யா பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், மீண்டும் பாலமுருகன் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்தபடியே நித்தியா மயக்க நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு நித்தியாவை பாலமுருகன் அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருந்ததால் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நித்தியாவின் உடலை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே நித்யாவிடம் இருந்த 25 சவரன் நகைகளை காணவில்லை எனவும், அவரை காதலித்து வந்த பாலமுருகன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் நித்தியாவின் பெற்றோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பாலமுருகன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பணம் பிரச்சனை தொடர்பாக நித்யா மற்றும் அவரது பெற்றோருக்கு இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் வரும் எனவும் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நித்யா ஃபோனை எடுக்காததால் தான் வீட்டிற்கு வந்து பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் நித்தியா பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது கடைசியாக நித்தியா ஒருவரிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த நபரை போலீசார் விசாரணை செய்த போது அவர் மருத்துவரான சந்தோஷ்குமார் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ந்து மழுப்பலாகவே பதில் கூறி வந்ததால் போலீசாரின் பாணியில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நித்யா மேக்-அப் ஆர்டிஸ்டாக பணியாற்றிக்கொண்டு, ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி பலரை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடியோ காலில் பேசி நித்யா பணப்பறிப்பில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தன்னுடன் பழகும் நபர்களை பார்ட்டி, பப் போன்று அழைத்துச் சென்று மது அருந்துவதும் தெரியவந்துள்ளது.
இதே போல், தன் நண்பரின் திருமணத்தில் மருத்துவர் சந்தோஷ்குமார் நித்யாவை சந்தித்ததும், அப்போது நித்யாவிற்கு மீது காதல் வயப்பட்டதாகவும், தொலைப்பேசி எண்ணை வாங்கி கொண்டு வாட்சப் வீடியோ கால் மூலமாக பேசி நெருக்கமாகி, பின்னர் லிவிங் டூ கெதரில் சில நாட்கள் வாழ்ந்ததாகவும் தெரிகிறது. பின்னர் வேறு ஒருவரோடு நித்யாவிற்க்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனை கேட்டப்போது தகராறு ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்ற போது தன்னைவிட்டு விட்டு அந்த நபரோடு செல்வதாக கூறியதாகவும், சிறிது நாட்களிலே சந்தோஷை மறக்க முடியவில்லை என அந்த நபரிடம் பழகுவதை விட்டு விட்டு தன்னோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், நித்தியாவின் நடவடிக்கை பிடிக்காமல் விலகிய போது தன்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கியதாகவும், தன்னோடு நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் எனவும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும், அதனால் மாதம், மாதம் எனது சம்பளத்தில் பெரும்பகுதியை பெற்று செல்வதை வழக்கமாக்கி கொண்டதாகவும், சமீபத்தில் பேசும் போது உனக்கு திருமணம் ஆனாலும், உன்னை விட மாட்டேன் எனக்கூறியதால், நித்யஸ்ரீ கதையை முடிக்க திட்டமிட்டு அவரோடு கடைசியாக ஒன்றாக இருக்கலாம் எனக்கேட்டு நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து இருவரும் ஒன்றாக இருந்த பின் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, வோட்காவில் தான் கொண்டு வந்த மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டு, தான் மாத்திரை கலக்காத வோட்காவை குடித்ததாகவும், பின்னர் நித்யஸ்ரீ மசாஜ் செய்யக்கூறியதாகவும் அவருக்கு மசாஜ் செய்து கொண்டே உன்னை உண்மையாக நம்பிய தன்னை ஏன் ஏமாற்றினாய் , பிளாக்மெயில் செய்கிறாய் எனக்கேட்ட போது உன்னை விடமாட்டேன் எனக்கூறியதால் பின்னந்தலையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் படுக்கைக்கு அருகே லாக்கர் இருந்த நிலையில் நித்யாவின் கைகளை வைத்தே லாக்கரை திறந்து நகைகளை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பியதாகவும், பின்னர் தான் தனது வீட்டின் அருகே வசிக்கும் முஜிபர் என்பவரிடம் கட்டை பையில் நகையை துணியில் சுற்றி அவரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவித்தார். முஜிபருக்கு தான் கொலை செய்தது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் முஜிபரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடைசியாக நித்யஸ்ரீக்கு சந்தோஷ் எண்ணில் மட்டுமே அழைப்பு சென்றதின் அடிப்படையில் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டதாகவும், ஆனால் சிசிடிவில் சிக்கி கொண்டவரை மீண்டும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரித்த போது உண்மையை ஒப்புகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலை செய்யும் போது நித்யா சந்தோஷ்குமாரின் கையில் கடித்த காயமும் இருந்ததால் போலீசார் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.
நித்யா தொடர்ந்து, பணப்பறிப்பில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.