தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி என்.ஆனந்தும் பேசியப்படி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஆதவ் அர்ஜூனா, “அண்ணாமையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்று 18, 20 சதவீதம் வாக்கு வங்கி வச்சியிருக்காரு, இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வர்ற மாதிரி தெரியல, பாஜகவும் அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் என்று கூறியுள்ளார்.
இபிஎஸ் குறித்து விமர்சனம்
அதிமுக, பாஜக மற்றும் இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்டோரை விமர்சனம் செய்வது போல் உள்ள அந்த வீடியோ வைரலான நிலையில், அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனது கருத்துக்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
ஆதவ் அர்ஜூனா வருத்தம்
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.
தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தை மதித்து பயணிப்பதே இலக்கு
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு… நன்றி!” என தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் குறித்து விமர்சனம்
அதிமுக, பாஜக மற்றும் இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்டோரை விமர்சனம் செய்வது போல் உள்ள அந்த வீடியோ வைரலான நிலையில், அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனது கருத்துக்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
ஆதவ் அர்ஜூனா வருத்தம்
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.
தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தை மதித்து பயணிப்பதே இலக்கு
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு… நன்றி!” என தெரிவித்துள்ளார்.