திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த களாம்பாகத்தை சேர்ந்த இளைஞர் தனுஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகியுள்ளனர்.
காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கலாம்பாக்கதிற்கு வந்த கும்பல் ஒன்று வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததோடு தனுஷின் தம்பி சிறுவனை அந்த கும்பல் அடித்து போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த வாகனம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பெண்ணின் தந்தை வனராஜா, மணிகண்டன், கணேசன், சரத்குமார், ஓய்வு பெற்ற முன்னாள் SI மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைப்பெற்ற விசாரணையில் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கூலிப்படையினரை வைத்து சிறுவனை கடத்தியதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில் பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டை பகுதியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவரை கைது செய்ய வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் மூர்த்தியை கைது செய்யப்போவதாக எழுந்த தகவல் காட்டு தீ போல் பரவிய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கூடியதால் அவரை கைது செய்து அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தொண்டர்களின் முற்றுகையால் அதிவிரைவு படை போலீசார் ஜெகன்மூர்த்தி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு வரவழைக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதனைத் தொடர்ந்து ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்த சோதனை செய்தனர். ஆனால் ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லை என்பதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, ஜெகன்மூர்த்தி எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில் முன்ஜாமின் கோரப்பட்டுள்ள நிலையில், இந்த மனு இன்று நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும் இவ்வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, "ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஏடிஜிபி ஜெயராமனுக்கு சொந்தமானது என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், "ஆள் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இல்லை. எம்எல்ஏ என்ற முறையில் ஜெகன்மூர்த்தியை சந்திக்க ஏடிஜிபி வருவார். கடத்தலில் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல் துறை கூறுவது தவறு" என பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், "200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள்.
உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் காவல்துறையினரை அழைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்க பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். விசாரணைக்கு தனியாகத்தான் போக வேண்டும்" என்றார்.
மேலும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து உடனடியாக அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமனை திருவள்ளூர் மாவட்ட வெள்ளவேடு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கலாம்பாக்கதிற்கு வந்த கும்பல் ஒன்று வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததோடு தனுஷின் தம்பி சிறுவனை அந்த கும்பல் அடித்து போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த வாகனம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பெண்ணின் தந்தை வனராஜா, மணிகண்டன், கணேசன், சரத்குமார், ஓய்வு பெற்ற முன்னாள் SI மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைப்பெற்ற விசாரணையில் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கூலிப்படையினரை வைத்து சிறுவனை கடத்தியதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில் பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டை பகுதியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவரை கைது செய்ய வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் மூர்த்தியை கைது செய்யப்போவதாக எழுந்த தகவல் காட்டு தீ போல் பரவிய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் புரட்சி பாரத கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கூடியதால் அவரை கைது செய்து அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தொண்டர்களின் முற்றுகையால் அதிவிரைவு படை போலீசார் ஜெகன்மூர்த்தி இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு வரவழைக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதனைத் தொடர்ந்து ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் ஜெகன் மூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்த சோதனை செய்தனர். ஆனால் ஜெகன் மூர்த்தி வீட்டில் இல்லை என்பதால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, ஜெகன்மூர்த்தி எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில் முன்ஜாமின் கோரப்பட்டுள்ள நிலையில், இந்த மனு இன்று நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மேலும் இவ்வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, "ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஏடிஜிபி ஜெயராமனுக்கு சொந்தமானது என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், "ஆள் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இல்லை. எம்எல்ஏ என்ற முறையில் ஜெகன்மூர்த்தியை சந்திக்க ஏடிஜிபி வருவார். கடத்தலில் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல் துறை கூறுவது தவறு" என பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், "200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள்.
உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் காவல்துறையினரை அழைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்க பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். விசாரணைக்கு தனியாகத்தான் போக வேண்டும்" என்றார்.
மேலும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து உடனடியாக அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமனை திருவள்ளூர் மாவட்ட வெள்ளவேடு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.