தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக, மேடவாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழையும், துரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை மாவட்டம் சோலையார் உள்ளிட்ட சில பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
கனமழைக்கான வானிலை முன்னறிவிப்பு
செப்டம்பர் 5: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
செப்டம்பர் 6: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 8: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 9: நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 10: கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C-ஐ ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக, மேடவாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழையும், துரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை மாவட்டம் சோலையார் உள்ளிட்ட சில பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
கனமழைக்கான வானிலை முன்னறிவிப்பு
செப்டம்பர் 5: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
செப்டம்பர் 6: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 8: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 9: நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 10: கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பச்சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C-ஐ ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.