தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முக தேர்வு போன்ற தேர்வு நடைமுறைகள் முடிந்து 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் விசாரணையின் போது, தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லாமல் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்யக் கோரி பெயர் நீக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மனுதாரர்கள் வாதத்தை ஏற்று திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், முறையாக இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமாரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.
புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் அதனை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதில் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் விசாரணையின் போது, தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட தற்காலிகத் தேர்வுப் பட்டியலை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லாமல் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்யக் கோரி பெயர் நீக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மனுதாரர்கள் வாதத்தை ஏற்று திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், முறையாக இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமாரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.
புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் அதனை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.