K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு- காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்.4 வாகன மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீதான வழக்கு...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக திமுக எம்.பி, அதிமுக முன்னாள் எம்.பி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு!

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் தொடர்பான சொத்துகுவிப்பு வழக்கு.. 6 மாதத்திற்கு விசாரணையை முடிக்க உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சிக்கு எதிராக போராட்டம்...அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து

என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் பணி.. தேர்வு பட்டியல் ரத்து.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.