தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் எதிர்கட்சிகள், ஞானசேகரன் போனில் பேசியது யாரிடம்.. யார் அந்த சார்? முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கு மத்தியில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் கோட்டூர் சண்முகத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் போனில் பேசியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், “நான் பேசியதாக கூறுபவர்கள்.. நான் என்ன பேசினேன் என்கிற ஆடியோவையும் வெளியிடலாம்” என பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3.70 கோடியில் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் சண்முகம் என்கிற வட்ட செயலாளரிடம் நான் பேசியதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால் ஞானசேகரனுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை. சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற போது காலை உணவை வட்ட செயலாளர் வீட்டின் முன்பு அமர்ந்து சாப்பிட்டோம். அப்போது ஞானசேகரன் அதை போட்டோ எடுத்தார். அவ்வளவ தான் நடந்தது. கோட்டூர் சண்முகம் என்னை தொடர்பு கொண்டது, நலத்திட்ட உதவிகளை வழங்க அழைப்பு விடுப்பதற்காக தான். அண்ணாமலை, கோட்டூர் சண்முகத்துடன் நான் பேசியதாக சொல்லுகிறார்.. நான் என்ன பேசினேன் என்கிற ஆடியோவையும் அவர் வெளியிடலாம்” என்றார்.
மேலும் கூறுகையில், “வீரியமற்ற கொரோனா தான் ஒமிகரான் என்றும் பொது இடங்களில் செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் , இணை நோய் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் முகக்கவசம் போட்டு கொள்வது நல்லது என்றார்.
தமிழக சுகாதாரத்துறை எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளதாகவும், 94 ஆயிரம் படுக்கைகள், 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதிகள் உள்ளன என்றார். தமிழகத்தில் பான் மசாலா குட்கா தடை போட்டாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவதை காவல்துறை தடுப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது” என பதிலளித்தார்.
இதற்கு மத்தியில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் கோட்டூர் சண்முகத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் போனில் பேசியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், “நான் பேசியதாக கூறுபவர்கள்.. நான் என்ன பேசினேன் என்கிற ஆடியோவையும் வெளியிடலாம்” என பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா, அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3.70 கோடியில் மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் சண்முகம் என்கிற வட்ட செயலாளரிடம் நான் பேசியதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால் ஞானசேகரனுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவரிடம் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை. சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற போது காலை உணவை வட்ட செயலாளர் வீட்டின் முன்பு அமர்ந்து சாப்பிட்டோம். அப்போது ஞானசேகரன் அதை போட்டோ எடுத்தார். அவ்வளவ தான் நடந்தது. கோட்டூர் சண்முகம் என்னை தொடர்பு கொண்டது, நலத்திட்ட உதவிகளை வழங்க அழைப்பு விடுப்பதற்காக தான். அண்ணாமலை, கோட்டூர் சண்முகத்துடன் நான் பேசியதாக சொல்லுகிறார்.. நான் என்ன பேசினேன் என்கிற ஆடியோவையும் அவர் வெளியிடலாம்” என்றார்.
மேலும் கூறுகையில், “வீரியமற்ற கொரோனா தான் ஒமிகரான் என்றும் பொது இடங்களில் செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் , இணை நோய் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் முகக்கவசம் போட்டு கொள்வது நல்லது என்றார்.
தமிழக சுகாதாரத்துறை எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளதாகவும், 94 ஆயிரம் படுக்கைகள், 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதிகள் உள்ளன என்றார். தமிழகத்தில் பான் மசாலா குட்கா தடை போட்டாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவதை காவல்துறை தடுப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது” என பதிலளித்தார்.