வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்த நெல்லுக்கு உரிய விலை கொடுக்காமல் மிக குறைந்த விலை கொடுப்பதாகவும், அதிகாரிகள் அலட்சியமாக பேசுவதை கண்டித்தும் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொரப்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் நல்ல விலை கிடைக்கும் வரை தங்களது நெல் மூட்டைகளை குடோனில் வைக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதுநாள் வரை 75 கிலோ மூட்டைக்கு 2000 ரூபாய் வரை வழங்கி வந்த நிலையில், இன்று 1300 ரூபாய் வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை இங்கு வரும் வியாபாரிகள் நேரடியாக விலைக்கு வாங்குகிறார்கள்.
அந்த வகையில் நெல்லின் தரத்திற்கு ஏற்ப விலை போவதாகவும், விலை போகாத விவசாயிகளின் நெல் குடோனில் வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதுப்போன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள், ஒழுங்கு முறைக்கூடத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் நெல்லுக்கு உரியவிலை வழங்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் நல்ல விலை கிடைக்கும் வரை தங்களது நெல் மூட்டைகளை குடோனில் வைக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதுநாள் வரை 75 கிலோ மூட்டைக்கு 2000 ரூபாய் வரை வழங்கி வந்த நிலையில், இன்று 1300 ரூபாய் வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை இங்கு வரும் வியாபாரிகள் நேரடியாக விலைக்கு வாங்குகிறார்கள்.
அந்த வகையில் நெல்லின் தரத்திற்கு ஏற்ப விலை போவதாகவும், விலை போகாத விவசாயிகளின் நெல் குடோனில் வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதுப்போன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள், ஒழுங்கு முறைக்கூடத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் நெல்லுக்கு உரியவிலை வழங்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.