K U M U D A M   N E W S
Promotional Banner

விவசாயிகள்

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி கேள்வி

உழவர்களின் நலன்கள் தொடர்பாக வாக்குறுதிகளில் 5% கூட நிறைவேற்றாத திமுக அரசு, உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது காட்டும் அக்கறை இவ்வளவு தானா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும்.. இபிஎஸ் உறுதி

விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாய கடன் பெற சிபில் ஸ்கோர்.. உத்தரவை ரத்து செய்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் சிபில் பிரச்சனை காரணமாக திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சொன்னதெல்லாம் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக விவசாயிகள்!

வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

ஊட்டியில் கொட்டிய கனமழை...முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

கமுதியில் கொட்டித்தீர்த்த கனமழை...வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்பூசணி சாப்பிடலாமா? வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை.. வேதனையில் விவசாயிகள்!

பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது செய்த போலீஸ்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் முதல்வரை கண்டித்து தமிழக விவசாயிகள் செய்த செயல் | Bhagwant Mann | TN Farmers | Kumudam News

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்

மயிலாடுதுறை ஆட்சியரக கூட்ட அரங்கில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு எதிர்ப்பு |Mayiladuthurai News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்

கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு- வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் கனமழை

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை