மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் உருவாகக்கூடிய கிழக்கு-மேற்கு திசை காற்றழுத்த பரிமாற்ற மண்டலம் (East-West Shear Zone) இந்த ஆண்டில் முற்றிலும் வித்தியாசமாக, முதல் முறையாக மே மாத நடுப்பகுதியிலேயே உருவாக ஆரம்பித்துள்ளது. இந்த பரிமாற்ற மண்டலத்தின் விளைவாக, அரபிக் கடலும்,வங்காள விரிகுடாவிலும் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதில் அரபிக் கடலில் உருவாகும் மண்டலம் புயலாக வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த சுற்றுவட்ட அலை இன்னும் நெருக்கமாக வட தமிழகக் கடற்கரை (KTCC) பகுதிகளுக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிழக்குத் திசை காற்றுகள் நேரடியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னையை தாக்கும். இதனால் வருகிற நாட்களில் மழை அதிகரிக்கப்போகும் – பரபரப்பான வார இறுதி காத்திருக்கிறது.
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
மே மாதத்தில் 40°C வரை வெப்பநிலை இல்லாத ஒரு அரிய ஆண்டாக உள்ளது. எப்போதும் மே மாதத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 10°C என குளிர்ச்சியாக இருக்காது என்றும், ஆனால், சாதாரண மே மாத வெப்பத்துடன் ஒப்பிட்டால் இம்முறை பரவலாக சீரான, சற்றே குளிர்ச்சியான காலநிலையாக இருக்கும்
என்று தெரிவித்துள்ளார்.SUMMER COMES TO END TODAY. Rains chances increase for North Tamil Nadu including KTCC (Chennai) from today. An exciting weekend ahead
— Tamil Nadu Weatherman (@praddy06) May 16, 2025
=i====================
One of the most unique years for Tamil Nadu. There was no heat wave seen in Tamil Nadu this year and Chennai will not… pic.twitter.com/86nnArTXlZ