தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை... அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை... அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையில் மழைக்கு வாய்ப்பு

நாளை ( ஜூன்4) முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை அதிகபட்சம் 38 டிகிரி செஸ்சியஸ் ஒட்டியும், குறைந்த 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 10 மணி முதல் 10:30 மணி வரை அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருவண்ணாமலை முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொட்டித்தீர்த்த கனமழை

திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, ஏந்தல், இனாம் காரியந்தல், நல்லவன் பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரவு பத்து மணி முதல் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இரவு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நகர் பகுதிகளில் வெப்பம் குறைந்து குளுமையாக சூழல் நிலவியது.