பிரதமர் மோடி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்து விரைவில் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி நாளை பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய அமைச்சரவைக்கூட்டம்
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள் தங்களது துறையின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிலுவையில் இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றை தயாராக எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில்?
இந்த அமைச்சர்கள் குழு மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்ற முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் அளித்த பேட்டியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டையின் போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா இழந்த போர் விமானங்கள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரசும், திரிணாமூல் காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நாளை கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக்கூட்டம்
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள் தங்களது துறையின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிலுவையில் இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றை தயாராக எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில்?
இந்த அமைச்சர்கள் குழு மத்திய அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்ற முப்படை தலைமை தளபதி அனில் செளஹான் அளித்த பேட்டியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட சண்டையின் போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்தியா இழந்த போர் விமானங்கள் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரசும், திரிணாமூல் காங்கிரசும் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நாளை கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.