தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 102 பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கருணாநிதி பிறந்தநாள் இன்று செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் இன்று செம்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 102 பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கருணாநிதி பிறந்தநாள் இன்று செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் இன்று செம்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.