மொரிசியஸ் நாட்டிலிருந்து ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம் 320 பயணிகளுடன் நேற்று மாலை, சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32) தம்பதியினர், தங்களது பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை லிஸ்னா (Leshna) உடன், இந்த விமானத்தில், சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நடுவானில் குழந்தைக்கு சிகிச்சை
மொரிசியஸ் நாட்டில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பிறந்த இந்த குழந்தைக்கு, இருதயத்தில் பிரச்சனை என்பதால், இருதய சிகிச்சைக்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு, விமானத்தில் மருத்துவ உதவியாளர் ஒருவரின் துணையுடன் கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதை அடுத்து விமானிக்கு, விமான பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு 8 நாட்கள் ஆன, பெண் குழந்தை மிக ஆபத்தான நிலையில், விமானத்தில் வந்து கொண்டு இருக்கிறது. விமான நிலைய மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க கூறினார். அதோடு குழந்தைக்கு நடுவானில், விமானத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கதறி அழுத தம்பதி
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து இருந்தது. இதை அறிந்ததும் குழந்தையின் பெற்றோரான மொரிசியஸ் தம்பதியினர் விமானத்துக்குள் கதறி அழுது துடித்தனர். சக பயணிகளும் விமான ஊழியர்களும், மொரிசியஸ் தம்பதியை ஆறுதல் கூறி தேற்றினர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
பயணிகள் சோகம்
இந்த விமானம் வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் மொரிசியஸ்க்கு, மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, குழந்தை ஒன்று உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பே, மீண்டும் பயணிகளை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்று விமானி கூறிவிட்டார். இதையடுத்து ஏர் மொரிசியஸ் விமானம், முழுமையாக ஸ்பிரே அடித்து சுத்தப்படுத்தப்பட்டது.
அதன் பின்பு சென்னையில் இருந்து மொரிசியத்துக்கு, 288 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, இரவு 7.35 மணிக்கு, விமானம் புறப்பட்டு சென்றது. மொரிசியஸ் நாட்டில் பிறந்த குழந்தை, உயிரைக் காப்பாற்றுவதற்காக விமானத்தில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, உயிரிழந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடுவானில் குழந்தைக்கு சிகிச்சை
மொரிசியஸ் நாட்டில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பிறந்த இந்த குழந்தைக்கு, இருதயத்தில் பிரச்சனை என்பதால், இருதய சிகிச்சைக்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு, விமானத்தில் மருத்துவ உதவியாளர் ஒருவரின் துணையுடன் கொண்டு வந்து கொண்டு இருந்தனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதை அடுத்து விமானிக்கு, விமான பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு 8 நாட்கள் ஆன, பெண் குழந்தை மிக ஆபத்தான நிலையில், விமானத்தில் வந்து கொண்டு இருக்கிறது. விமான நிலைய மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க கூறினார். அதோடு குழந்தைக்கு நடுவானில், விமானத்திலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கதறி அழுத தம்பதி
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து இருந்தது. இதை அறிந்ததும் குழந்தையின் பெற்றோரான மொரிசியஸ் தம்பதியினர் விமானத்துக்குள் கதறி அழுது துடித்தனர். சக பயணிகளும் விமான ஊழியர்களும், மொரிசியஸ் தம்பதியை ஆறுதல் கூறி தேற்றினர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
பயணிகள் சோகம்
இந்த விமானம் வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் மொரிசியஸ்க்கு, மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, குழந்தை ஒன்று உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பே, மீண்டும் பயணிகளை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்று விமானி கூறிவிட்டார். இதையடுத்து ஏர் மொரிசியஸ் விமானம், முழுமையாக ஸ்பிரே அடித்து சுத்தப்படுத்தப்பட்டது.
அதன் பின்பு சென்னையில் இருந்து மொரிசியத்துக்கு, 288 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, இரவு 7.35 மணிக்கு, விமானம் புறப்பட்டு சென்றது. மொரிசியஸ் நாட்டில் பிறந்த குழந்தை, உயிரைக் காப்பாற்றுவதற்காக விமானத்தில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, உயிரிழந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.