சென்னையில் சமீபத்தில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் பேசிய கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமாரை பார்த்து பேசினார்.
மன்னிப்பு கேட்க முடியாது
கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என கமல்ஹாசன் கூறியதால் பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தக் லைஃப் படத்தின் பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர். மேலும், கன்னடம் தொடர்பான பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் என கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள சித்தராமையா, கன்னட மொழியின் நீண்ட வரலாறு பாவம் கமலுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள கமல்ஹாசன், “தனது பேச்சுக்கு எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதுமே மன்னிப்பு கேட்காது. நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும், உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூத்த மொழி தமிழ் தான்
இந்த நிலையில் மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி: தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்! தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது
நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை.
தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது. கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது
கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என கமல்ஹாசன் கூறியதால் பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தக் லைஃப் படத்தின் பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர். மேலும், கன்னடம் தொடர்பான பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் என கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள சித்தராமையா, கன்னட மொழியின் நீண்ட வரலாறு பாவம் கமலுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள கமல்ஹாசன், “தனது பேச்சுக்கு எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதுமே மன்னிப்பு கேட்காது. நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும், உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூத்த மொழி தமிழ் தான்
இந்த நிலையில் மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி: தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்! தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது
நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை.
தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது. கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.