காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதோடு, பலமுறை இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதை ஈரான் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அறிந்துக் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. கடந்த ஜூன் 12 ஆம் தேதியனறு ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்றப் பெயரில் தாக்குதல் இஸ்ரேல் நடத்தியது.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால், மத்திய அரசு அங்குள்ள இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை எடுத்து, அங்கு இருப்பவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரானில் தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கின்றனர். போர் பதற்றத்திற்கான சூழ்நிலை அதிகரித்து வருவதால், ஈரானில் தொடர்ந்து தங்குவது ஆபத்தானதாக மாறி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டு, ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
“ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்கள், மாணவர்கள், குடும்பத்துடன் இருப்பவர்கள் என யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் முதல் முன்னுரிமை” என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விமான சேவைகள், விசா அனுமதிகள், சோதனை நடவடிக்கைகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரைவில் முதற்கட்டமாக சுமார் 800 இந்தியர்கள் ஈரானிலிருந்து அழைத்து வரப்பட உள்ளனர். இதற்கு தேவையான விமானங்களை இந்திய விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கியுள்ளது.
இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்திய அரசு எப்போதும் தன்னுடைய குடிமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுவதாக அரசு செயல்படுவதாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அறிந்துக் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. கடந்த ஜூன் 12 ஆம் தேதியனறு ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்றப் பெயரில் தாக்குதல் இஸ்ரேல் நடத்தியது.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில் அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால், மத்திய அரசு அங்குள்ள இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மீட்க நடவடிக்கை எடுத்து, அங்கு இருப்பவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரானில் தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கின்றனர். போர் பதற்றத்திற்கான சூழ்நிலை அதிகரித்து வருவதால், ஈரானில் தொடர்ந்து தங்குவது ஆபத்தானதாக மாறி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டு, ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
“ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்கள், மாணவர்கள், குடும்பத்துடன் இருப்பவர்கள் என யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மத்திய அரசின் முதல் முன்னுரிமை” என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விமான சேவைகள், விசா அனுமதிகள், சோதனை நடவடிக்கைகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரைவில் முதற்கட்டமாக சுமார் 800 இந்தியர்கள் ஈரானிலிருந்து அழைத்து வரப்பட உள்ளனர். இதற்கு தேவையான விமானங்களை இந்திய விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கியுள்ளது.
இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்திய அரசு எப்போதும் தன்னுடைய குடிமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுவதாக அரசு செயல்படுவதாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.