பெங்களூரில் நகைக்கடையில் பணிபுரிவதாகக் கூறப்படும் பெண், பைக் டாக்ஸிசி ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், கோபமடைந்த ஓட்டுநர் பெண்ணை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை அறைந்த ஓட்டுநர்
பெங்களூரு ஜெயநகரில் ஒரு பெண் பயணி ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்றுள்ளார். நகைக் கடையில் பணிபுரிவதாக கூறப்படும் அந்தப் பெண், பைக் டாக்ஸி ஓட்டுநர் சுமன் என்பவருடன், நடுவில் இருந்து இறங்கிய பிறகு வேகமாக வாகனம் ஓட்டியதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பெண் ஆங்கிலம் மட்டுமே பேசியுள்ளார். ஓட்டுநர் கன்னடம் மட்டுமே பேசியுள்ளார். அந்தப் பெண் தலைக்கவசத்தைத் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சாலையில் கீழே விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணுடன் வாக்குவாதம்
இதுதொடர்பான புகாரில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சுமன் கைது செய்யப்பட்டு, அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இருவரும் வாக்குவாதம் செய்யும் நிலையில், அதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயற்சிப்பதும், ஆனால் அது பலனளிக்காமல் இருவதும் தொடர்ந்து வாக்குவாதம் செய்வதும் பதிவாகி உள்ளது.
இது குறித்து கூறியுள்ள ஓட்டுநர் சுமன், "நான் சாலையின் நடுவில் இருந்தபோது அந்த பெண் என்னை நிறுத்தச் சொல்லிக்கொண்டே இருந்தார். நாங்கள் அங்கே நிறுத்தினால் பின்னால் இருந்து யாராவது எங்களைத் திட்டுவார்கள் என்று நான் விளக்கினேன்" என்று கூறினார். மேலும் அந்த பெண்ணை ‘உங்கள் மாநிலத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறியதையும் சுமன் ஒப்புக்கொண்டார்.
என்னை துஷ்பிரயோகம் செய்தார்
மேலும், அந்தப் பெண் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தனது காலரைப் பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். "அந்த பெண் என்னை துஷ்பிரயோகம் செய்தார், நான் படித்தவனா இல்லையா என்று கேட்டார்... அவள் தொடர்ந்து என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்... நான் அவளிடம் பணம் பற்றிக் கேட்டேன், ஆனால் அவள் என்னைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தார். அவள் என் காலரைப் பிடித்து இழுத்தாள்."
"அவளுக்கு உடல் ரீதியாக தாக்க உரிமை இல்லை என்று நான் அவளிடம் சொன்னேன், பிறகு அவள் என்னை இரண்டு முறை டிபன் பாக்ஸால் அடித்தாள், அப்போதுதான் நான் அவளை திருப்பி அடித்தேன். அவளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால் அவள் தொடர்ந்து குரல் எழுப்பினாள்," என்று சுமன் மேலும் கூறினார்.
காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், அந்தப் பெண் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் இந்த விஷயத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் கூறுகின்றன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மொழிப் பிரச்னை உள்ளது
இது குறித்து பேசியுள்ள அந்த பெண், ஓட்டுநர் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, அவர் என்னைத் தாக்கியிருக்கக் கூடாது. நான் பணம் செலுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
"உங்கள் மாநிலத்திற்குச் திரும்பிச் செல்லுங்கள்" என்று அவர் தன்னிடம் கூறியதை உறுதிப்படுத்திய, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். மேலும், கன்னடர்களுக்கு மொழிப் பிரச்னை உள்ளது. நான் அவருடன் சண்டையிட விரும்பவில்லை. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்வார்கள். கர்நாடகாவில் வாழ்ந்தால் நம் மொழியை அறிந்திருக்க வேண்டும், இல்லையெனில் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் நினைக்கிறார்கள். ஆனால் "மாநிலம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் "நாடு" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்" என்று கூறினார்.
பைக் டாக்ஸிகளின் பயன்பாடு
இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன டாக்சிகளை நிறுத்தி வைக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக சாலைகளில் பைக் டாக்சிகள் இனி காணப்படாமல் போகலாம் . அப்போது மாநில அரசு, பைக் டாக்சிகளை வணிக வாகனங்களாக இயக்க முடியாது என்று வாதிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு, பைக் டாக்சிகள் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர். மீண்டும், அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் மேலும் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளனர். இப்போது, 12 வாரங்கள் முடிந்துவிட்டன.
நாட்டின் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில், ஏராளமான பைக் டாக்சிகள் உள்ள. ரேபிடோ சந்தைப் பங்கில் 60%-ஐ கொண்டுள்ளது. தினமும் 16.5 லட்சம் சவாரிகளை மேற்கொள்கிறது. மாநிலம் முழுவதும் பைக் டாக்ஸிகள் குறைந்தது 1.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
பெண்ணை அறைந்த ஓட்டுநர்
பெங்களூரு ஜெயநகரில் ஒரு பெண் பயணி ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்றுள்ளார். நகைக் கடையில் பணிபுரிவதாக கூறப்படும் அந்தப் பெண், பைக் டாக்ஸி ஓட்டுநர் சுமன் என்பவருடன், நடுவில் இருந்து இறங்கிய பிறகு வேகமாக வாகனம் ஓட்டியதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பெண் ஆங்கிலம் மட்டுமே பேசியுள்ளார். ஓட்டுநர் கன்னடம் மட்டுமே பேசியுள்ளார். அந்தப் பெண் தலைக்கவசத்தைத் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சாலையில் கீழே விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணுடன் வாக்குவாதம்
இதுதொடர்பான புகாரில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சுமன் கைது செய்யப்பட்டு, அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இருவரும் வாக்குவாதம் செய்யும் நிலையில், அதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயற்சிப்பதும், ஆனால் அது பலனளிக்காமல் இருவதும் தொடர்ந்து வாக்குவாதம் செய்வதும் பதிவாகி உள்ளது.
இது குறித்து கூறியுள்ள ஓட்டுநர் சுமன், "நான் சாலையின் நடுவில் இருந்தபோது அந்த பெண் என்னை நிறுத்தச் சொல்லிக்கொண்டே இருந்தார். நாங்கள் அங்கே நிறுத்தினால் பின்னால் இருந்து யாராவது எங்களைத் திட்டுவார்கள் என்று நான் விளக்கினேன்" என்று கூறினார். மேலும் அந்த பெண்ணை ‘உங்கள் மாநிலத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறியதையும் சுமன் ஒப்புக்கொண்டார்.
என்னை துஷ்பிரயோகம் செய்தார்
மேலும், அந்தப் பெண் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தனது காலரைப் பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். "அந்த பெண் என்னை துஷ்பிரயோகம் செய்தார், நான் படித்தவனா இல்லையா என்று கேட்டார்... அவள் தொடர்ந்து என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்... நான் அவளிடம் பணம் பற்றிக் கேட்டேன், ஆனால் அவள் என்னைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தார். அவள் என் காலரைப் பிடித்து இழுத்தாள்."
"அவளுக்கு உடல் ரீதியாக தாக்க உரிமை இல்லை என்று நான் அவளிடம் சொன்னேன், பிறகு அவள் என்னை இரண்டு முறை டிபன் பாக்ஸால் அடித்தாள், அப்போதுதான் நான் அவளை திருப்பி அடித்தேன். அவளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால் அவள் தொடர்ந்து குரல் எழுப்பினாள்," என்று சுமன் மேலும் கூறினார்.
காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், அந்தப் பெண் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் இந்த விஷயத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் கூறுகின்றன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மொழிப் பிரச்னை உள்ளது
இது குறித்து பேசியுள்ள அந்த பெண், ஓட்டுநர் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, அவர் என்னைத் தாக்கியிருக்கக் கூடாது. நான் பணம் செலுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
"உங்கள் மாநிலத்திற்குச் திரும்பிச் செல்லுங்கள்" என்று அவர் தன்னிடம் கூறியதை உறுதிப்படுத்திய, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். மேலும், கன்னடர்களுக்கு மொழிப் பிரச்னை உள்ளது. நான் அவருடன் சண்டையிட விரும்பவில்லை. பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாழ்வார்கள். கர்நாடகாவில் வாழ்ந்தால் நம் மொழியை அறிந்திருக்க வேண்டும், இல்லையெனில் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் நினைக்கிறார்கள். ஆனால் "மாநிலம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் "நாடு" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்" என்று கூறினார்.
பைக் டாக்ஸிகளின் பயன்பாடு
இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன டாக்சிகளை நிறுத்தி வைக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக சாலைகளில் பைக் டாக்சிகள் இனி காணப்படாமல் போகலாம் . அப்போது மாநில அரசு, பைக் டாக்சிகளை வணிக வாகனங்களாக இயக்க முடியாது என்று வாதிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு, பைக் டாக்சிகள் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர். மீண்டும், அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் மேலும் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளனர். இப்போது, 12 வாரங்கள் முடிந்துவிட்டன.
நாட்டின் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில், ஏராளமான பைக் டாக்சிகள் உள்ள. ரேபிடோ சந்தைப் பங்கில் 60%-ஐ கொண்டுள்ளது. தினமும் 16.5 லட்சம் சவாரிகளை மேற்கொள்கிறது. மாநிலம் முழுவதும் பைக் டாக்ஸிகள் குறைந்தது 1.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.