K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை- பிரதமர் மோடி பேச்சு

“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி

“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை.. திமுக கவுன்சிலர் பேரன் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சு.வெங்கடேசன் எம்பி-க்கு கொலை மிரட்டல்.. சிபிஎம் கண்டனம்

“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!

சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது பிரதமர் என்ன செய்கிறார்? கனிமொழி எம்பி கேள்வி

விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.