K U M U D A M   N E W S

Author : Sumalekha M

NLC பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு... மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் !

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தி.நகரில் பயங்கரம்... 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை!

சென்னை தி.நகர் பகுதியில் சில மணி நேர இடைவெளியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !

தமிழ்நாடு மின்துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மின்வாரியத்தின் வருவாய், செலவினம், உள்கட்டமைப்பு, மனிதவள நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

ஆ.ராசாவுக்கு மனப்பிறழ்வு நோய் ! - வன்னி அரசு காட்டம்

திமுக எம்.பி ஆ.ராசா கூட்டணி கட்சிகளை விமர்சித்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, "ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவரை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்! - திருமாவளவன் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !

புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமதாசை சந்தித்த அன்புமணி.... பிரிந்த தந்தை - மகன் மீண்டும் இணைந்தார்களா?

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த தந்தை - மகன் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் குடும்பத்துடன் நேரில் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்