K U M U D A M   N E W S

ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோயில்: சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

வடதிருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம் நடைப்பெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் நடக்காத நிகழ்வு.. ஹரிஹரன் சந்திப்பு கோலாகலம்

பொன்னேரியில் நடைபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி, மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் – குவிந்த பக்தர்கள்

பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.