"எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூருவோம்" - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூருவோம் என தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூருவோம் என தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ஊழியரை இளைஞர் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் ப்ரதர், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படங்கள், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியாகின. இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் கோயிலில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று. போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குவிந்தனர், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.