K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

TNPSC New Changes : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்

TNPSC New Changes : அரசுப் பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய முறையில் தேர்வர்களின் விடைத்தாளில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படவுள்ளது

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Bus Driver Attack : வழிவிடாமல் சென்ற தனியார் பேருந்து.. முந்தி சென்று தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்

Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செப்.27-ல் பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு

சமக்ரா சிக்ஷா நிதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 27ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது.

Offer Sale : ஆஃபர் கொடுத்த துணிக்கடை... அள்ளிச்செல்ல குவிந்த மக்களால் தள்ளுமுள்ளு..

Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

Earthquake : நெல்லை அருகே நில அதிர்வு... மக்கள் அச்சம்

Tirunelveli Earthquake : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

LIVE : Thirumavalavan Speech : தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் - திருமா

VCK Leader Thirumavalavan About Liquor Ban in Tamil Nadu : விசிக தலைவர் திருமாவளவன் x பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. மத்திய அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் பலி..

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ் மற்றும் கரிபிரான் ஆகியோர் உயிரிழந்தனர்.

சொந்த மண்ணில் அசத்திய அஸ்வின்... முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்க தேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேவநாதனின் சொத்துகள் பறிமுதல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி கைது

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன

BREAKING | இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக 53.84% வாக்குகளை பெற்று முன்னிலை

"இனி வரப்போகிறவர்களுக்கு..!" -கை நீட்டி கடுப்பான கமல்.. ஒரே நொடியில் அதிர்ந்த அரங்கம்..

"இனி வரப்போகிறவர்களுக்கு..!" -கை நீட்டி கடுப்பான கமல்.. ஒரே நொடியில் அதிர்ந்த அரங்கம்..

தவெக கட்சி மாநாடு.., புஸ்ஸி ஆனந்த் கொடுத்த மாஸ் Update

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி...

திமுக கூட்டணியில் புகைச்சல்..எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

இலங்கையில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை.., அதிபராகப்போவது யார்?

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசாநாயக தொடர்ந்து முன்னிலை. இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

மாஞ்சோலை விவகாரம் - இடியாய் விழுந்த கேள்வி.. அதிகாரிகள் திணறல்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சி.. புகாரின் பேரில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை

தவெக மாநாட்டிற்கு முன்.. வெளியான புது தகவல்

தவெக மாநாடு நடத்துவதற்காக 177 ஏக்கர் நிலம் ஒப்பந்தம். வாகனங்கள் நிறுத்தம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைப்பு

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

அமெரிக்காவில் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பு கொடுத்த இந்திய வம்சாவளியினர்!

பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.