K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

"இதற்கு வெட்கப்பட வேண்டும்.." - வானதி சீனிவாசன் தாக்கு

நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

"யூகலிப்டஸ் மரங்கள் குறித்து கட்டுக்கதை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது. யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு ஏற்படுவது பற்றி மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி விடுதலையில் கடைசி நேரத்தில் எழுந்த புதிய சிக்கல்..

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பா? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி தியாகியா..? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகி, திமுகவுக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி தியாகியா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

செந்தில் பாலாஜி ஜாமின்; உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாடு குறித்து ஆலோசனை.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆனந்த் பேச்சுவார்த்தையில்  ஈடுபட உள்ளார்.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

“வசூல்ராஜா MBBS வேலையை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை செய்கிறது” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி அதிரடி கைது

சேலம் கிச்சிபாளையம் சேர்ந்தவர் ஜான். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று நான்கு வழக்குகளிலும் விசாரணைக்காக தனது மனைவி சரண்யாவுடன் சேலம் நீதிமன்றம் வந்தார். விசாரணை முடிந்து காரில் ஏறி செல்ல முயன்ற அவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்தனர்

மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தொலைபேசி மூலம் விஜய் ஆறுதல்

மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

"செந்தில் பாலாஜி ஜாமின்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" - முத்தரசன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்... “சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” - காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இது சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

"செந்தில் பாலாஜி நிரபராதி இல்லை.." - சசிரேகா, அதிமுக

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், செந்தில் பாலாஜி நிரபராதி இல்லை இல்லை என அதிமுக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னால் ஜாமின் ... செந்தில் பாலாஜி ஜாமின் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

#BREAKING : செந்தில்பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தடை இல்லை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது. இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

முடிவிற்கு வந்த சிறைவாசம்.. முன்னாள் அமைச்சர் Senthil Balaji-க்கு நிபந்தனை ஜாமின்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதன் மூலம் 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம்.. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.