K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

#breakingNews: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்கிடைக்குமா..? சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது.

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் எடுத்த திடீர் முடிவு..

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோயிலுக்குள் நடந்த பகீர் சம்பவம்... சிறுமி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்... கொதித்தெழுந்த மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்... அதிரடியாக களமிறங்கிய சிபிசிஐடி.. வேலூர் சிறையில் பரபரப்பு..

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஒரு நாள் மழை! சென்னையின் நிலை

சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவெக மாநாடு - கடைபிடிக்க வேண்டிய 17 முக்கிய நிபந்தனைகள்

நடிகர் விஜய்யின் தவெக மாநாடு அக்டோபர் 27-ம் தேதி மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பல கோடி மதிப்புள்ள நிலம்.. கைது செய்யப்பட்ட டிஐஜி... விசாரணையில் பகீர் தகவல்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – பிரதமர் மோடி சந்திப்புவெளியாகும் முக்கிய அறிவிப்பு?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை தீர்ப்பு

Senthilbalaji Case Update: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமின் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவிற்கு நாளை தீர்ப்பு.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.

பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து - சிவகாசியில் பயங்கரம் !

Crackers Blast in Sivakasi: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாடுகளை இறக்கி வைக்கும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

"மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தரமானது" |

Madurai Meenakshi Temple Laddu: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமானது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை... முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு, 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 வாபஸ் |

திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காரில் 5 சடலம்.. கிடைத்த கடிதம்.. வெளியான புதிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பள்ளி வளாகங்கள் அருகே குட்காவை தடை செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு

பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிம்னற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தின், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு..

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..

திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

கேரளாவை அலறவிடும் நிபா வைரஸ்... எல்லை பகுதிகளில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.