மனித உரிமைகள் ஆணையத்தில் மோகன் ஜி பரபரப்பு புகார்..
இயக்குநர் மோகன் ஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முடா வழக்கு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
Godown Fire Accident in Chengalpattu : செங்கல்பட்டு வண்டலூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சைக்கு பின் கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் நந்தினி பிராண்ட் நெய்யை தேவஸ்தானம் கொள்முதல் செய்கிறது. டேங்கர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட நெய் திருப்பதிக்கு வந்தடைந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக இருந்த மாதவி, மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் அவரது தாய் மாமன் செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் அவரை கைது செய்துள்ளதாக தகவால் வெளியாகியுள்ளது
சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து வெளியே வந்த யோகிபாபுவுடன் அங்கிருந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.