K U M U D A M   N E W S
Advertisement

உலகம்

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே நாளில் 106 பேர் பலி!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காசா: உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 2 பேர் பலி, 70 பேர் காயம்!

காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவுப் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம்: மலேசியத் தமிழ், மலாய் மொழிகளுக்குப் பிரத்யேக 'செய்தி சர்வர்' அறிமுகம் செய்த IPD மீடியா நெட்வொர்க்!

IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

புவி கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!

சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.