K U M U D A M   N E W S

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மோட்டார் சுவிட்சால் நெதர்லாந்திற்கு பறந்த தகவல்.. டெக்னாலஜியால் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதாகை ஏந்திய அதிமுக உறுப்பினர்கள்... சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்ற சபாநாயகர்!

சட்டப்பேரவையில் பதாகை ஏந்தியதாக அதிமுக உறுப்பினர்கள், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!

உலகப் புகழ் பெற்ற 96 அடி உயரமும், 350 டன் எடையளவும் கொண்ட திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.