K U M U D A M   N E W S

தமிழ்நாடு

20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கொங்கந்தான்பாறை - சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் புறவழிச்சாலை அமைக்க அடிக்கல்

தமிழகத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்.. சிரமத்திற்குள்ளான பொதுமக்கள்

தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், விமானங்கள் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகியுள்ளது.

நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அடையாளத்தை மாற்றுவதற்கு  உதவ வேண்டும் என  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்ட காவலர்கள்.. போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில் கைதான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்ட விவகாரம்.. இருவர் அதிரடி கைது

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி

பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.

வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை கியூ பிரிவு போலீசார் விசாரணை

அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வெளியிட்ட ஓட்டுநர்-நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு உண்மையல்ல- சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடி

ஏடிஜிபி கல்பனா நாயக் தன்னை கொல்ல சதி திட்டம் நடைபெற்றதாக புகாரளித்த நிலையில் அவர் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என சீருடை பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

நட்ட நடு சாலையில் பஞ்சாயத்து கிளார்க்கிற்கு நேர்ந்த பயங்கரம்.. நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை

ஏடிஜிபி புகார் உண்மையில்லை -தேர்வாணையம்

தேவையான திருத்தங்களை செய்து இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது - தேர்வாணையம்

பெண் ஏடிஜிபி பகிர் புகார்.. காவல்துறை பரபரப்பு விளக்கம்

"ஏடிஜிபி கல்பான நாயக் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை"

மருத்துவமனையில் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம்

செவிலியரை கத்தியால் குத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவர் கைது

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் உயிரை பறிக்க சதி.. பெண் அதிகாரி புகார்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு