K U M U D A M   N E W S

பிரபல A+ ரவுடி சிடி மணிக்கு சுத்துப்போட்ட போலீஸ்.. உயிருக்கு பாதுகாப்பு கோரி தந்தை கண்ணீர்

பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் புகைச்சல்..எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை... இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.

13 வயது மாணவியிடம் சில்மிஷம்.. முதியவரின் கொடூர செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

#JUSTIN : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. என்ன காரணம்?

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.

#BREAKING : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.