K U M U D A M   N E W S

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ரோட்டரி சங்கத்தின் கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்... ஏராளமான பெண்கள் உற்காசத்துடன் பங்கேற்பு!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில், ஏராளமான பெண்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.