தவெக ஆட்சி கவிழ்க்க சதி...... ஹவாலா பணம் பறிமுதல் ....
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.