Budget 2025: கிராம பொருளாதாரத்தில் புதிய புரட்சி... பட்ஜெட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.
Union Budget 2025 : மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?
மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களின் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.