அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.