K U M U D A M   N E W S
Promotional Banner

CBI

Gutka Case : குட்கா முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. முக்கிய புள்ளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வைத்து கெடு

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எதிரான குற்றபத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ArvindKejriwal: ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால்... கொட்டும் மழையில் தொண்டர்கள் கொண்டாட்டம்!

மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... சிபிஐ நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி!

''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு.. CBI-க்கு அவகாசம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

மருத்துவ மாணவி கொலை: தாமதமாக வந்த சிபிஐ வழக்கறிஞர்.. கடும் கோபமடைந்த நீதிபதி!

''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நில மோசடி வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் சோதனை

நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

மருத்துவ மாணவி கொலை.. ஆர்.ஜி.கர் மருத்துமனை முன்னாள் முதல்வர் அதிரடி கைது!

மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

#BREAKING | கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு.. சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு

NEET Paper Leak : நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ.. குற்றவாளிகள் எத்தனை பேர்?

NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.