ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.