K U M U D A M   N E W S

Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

உதகையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை உதகை அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்த பின்பு பயனாளிகளுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

அரியலூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்!

அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.

"கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலின் ஜுஜூபி” - செல்லூர் ராஜு தாக்கு

கருணாநிதியாலே கூட ஒருமுறைக்கு பின்னர் மறுமுறை ஆட்சி செய்ய முடியாத நிலையில் ஸ்டாலின் எல்லாம் ஜுஜூபி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் தூத்துக்குடி மீனவர்கள்; கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பங்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.

வேர்களைத் தேடி தமிழகம் வந்த வெளிநாட்டவர்கள்.. தஞ்சை கல்லணையை பார்த்து பரவசம்

“தஞ்சை பெரிய கோயிலில் காலடி வைத்த உடன் உடலில் ஒரு வைப்ரேஷன் வந்தது” என தமிழ்நாடு அரசின் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ் கல்லணைக்கு வந்த கனடாவில் வசித்து வரும் தமிழ் பூர்வகுடி பெண் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் அரசு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்தவர்.

வங்கதேசத்தில் நெருக்கடி.. திருப்பூருக்கு வாய்ப்பு.. அண்ணாமலை வலியுறுத்தல்

ஜவுளித்துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Bar License : பார் உரிமம் வழங்குவதற்கு இவ்வளவு வேகமா?.. 48 மணி நேரத்தில் நடந்த மர்மம் என்ன?.. ராமதாஸ் சரமாரி கேள்வி

PMK Leader Ramadoss on Chennai Bar License : சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Anbumani Ramadoss : மது வணிகம் “தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி”; அன்புமணி ராமதாஸ் சாடல்

Anbumani Ramadoss Slams Tamil Nadu Govt : “சென்னையில் ரத்து செய்யப்பட்ட தனியார் நட்சத்திர விடுதிகளின் குடிப்பக உரிமம் 48 மணி நேரத்தில் மீண்டும் வழங்கப்பட்டதன் மர்மம் என்ன?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

TN Govt New Scheme : “தனது துறை குறித்த புரிதல் உதயநிதிக்கு இருக்கிறதா?” - அண்ணாமலை கேள்வி

Annamalai Slams Udhayanidhi Stalin on TN Govt New Scheme : ‘தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – 2024’ திட்டத்தில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Fishermen Arrest : தமிழக மினவர்கள் மீண்டும் கைது; மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

Anita Radhakrishnan Meet Jaishankar on Fishermen Arrest : இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

Vairamuthu : வைரமுத்துக்கு 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' பட்டம்.. மதுரை தமிழ் இசைச் சங்கம் வழங்கியது!

Kavignar Vairamuthu Receives Muthamil Perarignar Award : ''எல்லாமொழியும் சமம் என்பது, உரிமை கோரத வரையில் தான். உரிமை கொண்டாடினால் அது குறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன். பொது மேடையில் 'நாவிதன்' என்ற சொற்களை தவிர்த்து சவரத் தொழிலாளி என்றுதான் பயன் படுத்த வேண்டும். சலவை தொழிலாளி, விவசாயிடம் தான் உழைக்கும் மக்களின் சங்கீதம் பிறக்கிறது'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.

NellaiMayor: என்ன நடக்கிறது நெல்லை திமுகவில்..? கட்சியின் முடிவுக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்

பரபரப்பாக நடைபெற்ற நெல்லை மேயர் தேர்தலில், ராமகிருஷ்ணன் என்ற கிட்டு வெற்றிப் பெற்றார். அதேநேரம் கட்சியின் முடிவுக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினரே ராமகிருஷ்ணனுக்கு எதிராக களத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Armstrong Murder Case : கூலிக்கு கொலை செய்கிறார்கள்; தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - வைகோ

Vaiko on Armstrong Murder Case : கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

'பஞ்சாயத்து ஓவர்'.. நெல்லை மேயர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு!

நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு போட்டியிடுவார் என கே.என்.நேரு-தங்கம் தென்னரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் ராமகிருஷ்ணன், 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin : 'இனி விண்வெளியில் அரசு பள்ளி மாணவர்களின் ஆட்சி'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Tamil Nadu Govt School Students : ''2022ம் ஆண்டு 75 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை நிறுவனங்களில் பயில தேர்வாகினர். 2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்த ஆண்டு 447 மாணவர்களும் உயர்கல்வியில் பயில தேர்வாகியுள்ளனர். இது வரும் நாட்களில் மேலும் உயரும்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ காலில் விழுந்த திமுக எம்.பி.. இதுதான் சமூகநீதி கட்சியா?.. விளாசும் நெட்டிசன்கள்

DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து திமுக எம்.பி மலையரசன் ஆசிர்வாதம் வாங்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

துரைமுருகன் லூசு போல் பேசுவார்.. திமுக சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொள்கிறது - கரு.நாகராஜன் தாக்கு

Karur Nagarajan Critize Duraimurugan : நிதி ஆயக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? சின்ன பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்பது போல இருக்கிறது என்று பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணி என்பது இனி இல்லை... எடப்பாடி பழனிசாமி உறுதி

ADMK Edappadi Palaniswami About BJP Alliance : தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை திமுக ஆட்சியில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.