குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தின் அதிர்வலைகள் இன்னும் நீங்காத நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரியன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் விமானி உடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்த வருத்தமான செய்தி கிடைத்துள்ளது. எஸ்டிஆர்எஃப் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இங்கு வரக்கூடிய அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக பாபா கேதாரைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 7 ஆம் தேதி, கேதார்நாத் நோக்கிச் சென்ற மற்றொரு ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானி காயமடைந்த போதிலும், அதில் இருந்த 5 பக்தர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஆரியன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் விமானி உடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்த வருத்தமான செய்தி கிடைத்துள்ளது. எஸ்டிஆர்எஃப் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இங்கு வரக்கூடிய அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக பாபா கேதாரைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 7 ஆம் தேதி, கேதார்நாத் நோக்கிச் சென்ற மற்றொரு ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானி காயமடைந்த போதிலும், அதில் இருந்த 5 பக்தர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.