கேரளாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் திலீப், குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், பல்சர் சுனில் உட்பட ஆறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் நடிகர் திலீப்பின் கைது
கேரளாவில் 2017 பிப்ரவரி 17-ஆம் தேதி, திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் சென்றபோது, பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் ஆறு நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவரே நடிகையைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. கடத்தப்பட்ட நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது.
இந்த விசாரணையில், பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 2017 ஜூலை 10-ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் அவர் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டு, ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீண்ட கால விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு
8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, பல்சர் சுனில் உட்பட 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார். எனினும், நடிகர் திலீப்பிற்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி மற்றும் நடிகர் திலீப்பின் கைது
கேரளாவில் 2017 பிப்ரவரி 17-ஆம் தேதி, திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் சென்றபோது, பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் ஆறு நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவரே நடிகையைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்யத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. கடத்தப்பட்ட நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்தது.
இந்த விசாரணையில், பிரபல மலையாள நடிகர் திலீப்பிற்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 2017 ஜூலை 10-ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் அவர் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டு, ஐடி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீண்ட கால விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு
8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், இதுவரை 1600 ஆவணங்கள், 280 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, பல்சர் சுனில் உட்பட 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்தார். எனினும், நடிகர் திலீப்பிற்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், அவரை விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









