தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்ப்பட்டது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வரும் ஆக.27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டு தேதியை மாற்ற வேண்டும் எனக் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுப்பட்டது.
தவெக மாநாடு
மாநாட்டு தேதியை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேட்டியளித்தார். தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி கோரி தவெக சார்பில் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
மாநாடு தேதி மாற்றம்
இந்த நிலையில் மாநாட்டு தேதியை மாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதாவது ஆக.21ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
ஆக.21ம் தேதி மாநாடு நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு
மாநாட்டு தேதியை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேட்டியளித்தார். தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி கோரி தவெக சார்பில் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
மாநாடு தேதி மாற்றம்
இந்த நிலையில் மாநாட்டு தேதியை மாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதாவது ஆக.21ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.
ஆக.21ம் தேதி மாநாடு நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.