தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்தானது கர்நாடகவிலுள்ள கன்னட அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியது. மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படத்தை கர்நாடகவில் வெளியிட விடுவோம் என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தெரிவித்துள்ள நிலையில் கமல் விளக்க கடிதம் ஒன்று அளித்துள்ளார்.
மே 30 ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன் என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவர் நரசிம்மலுவிற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் கமல்ஹாசன். அந்த கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளவை பின்வருமாறு-
மொழி மீதான அன்பு உண்மையானது:
”புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது, குறிப்பாக சிவ ராஜ்குமார் மீதுள்ள உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பது மட்டுமே. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ தேவையில்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ள மொழியாகும். எனது வாழ்க்கை முழுவதும், கன்னட மொழி பேசும் சமூகத்தினர் எனக்கு அளித்த அரவணைப்பையும், பாசத்தையும் நான் போற்றி வந்துள்ளேன், இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்: மொழி மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த மண்ணின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பானது இதயப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் நான் குரல் கொடுத்து வந்துள்ளேன். மேலும் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை சீர்குலைக்கிறது.”

சினிமாவின் மொழி தெரிந்தவன் நான்:
”எனக்கு சினிமாவின் மொழி தெரியும், அதைப் பேசவும் தெரியும். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் கூற்று நம் அனைவருக்கும் இடையே அந்தப் பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டுமே.
என் சீனியர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றை தான், நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அது தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்தது. எனது செயலின் காரணமாக சிவன்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் எங்கள் இருவருக்குமிடையேயான அன்பும், மரியாதையும் இப்போது மேலும் வலுவாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுதான் எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை.
நான் கூறிய கருத்து தொடர்பான இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்” என கமல் தெரிவித்துள்ளார்.
மே 30 ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் பெற்றுக்கொண்டேன் என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவர் நரசிம்மலுவிற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் கமல்ஹாசன். அந்த கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளவை பின்வருமாறு-
மொழி மீதான அன்பு உண்மையானது:
”புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது, குறிப்பாக சிவ ராஜ்குமார் மீதுள்ள உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பது மட்டுமே. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ தேவையில்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ள மொழியாகும். எனது வாழ்க்கை முழுவதும், கன்னட மொழி பேசும் சமூகத்தினர் எனக்கு அளித்த அரவணைப்பையும், பாசத்தையும் நான் போற்றி வந்துள்ளேன், இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்: மொழி மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த மண்ணின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பானது இதயப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் நான் குரல் கொடுத்து வந்துள்ளேன். மேலும் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை சீர்குலைக்கிறது.”

சினிமாவின் மொழி தெரிந்தவன் நான்:
”எனக்கு சினிமாவின் மொழி தெரியும், அதைப் பேசவும் தெரியும். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் கூற்று நம் அனைவருக்கும் இடையே அந்தப் பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டுமே.
என் சீனியர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றை தான், நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அது தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்தது. எனது செயலின் காரணமாக சிவன்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் எங்கள் இருவருக்குமிடையேயான அன்பும், மரியாதையும் இப்போது மேலும் வலுவாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுதான் எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை.
நான் கூறிய கருத்து தொடர்பான இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்” என கமல் தெரிவித்துள்ளார்.