ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி ராஜா போல் வலம்வந்த நடிகர் ஸ்ரீகாந்த், இன்று போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்படவே கோலிவுட் வட்டாரமே கதிகலங்கிப்போய் இருக்கிறது. தற்போது நடிகர் கிருஷ்ணாவிடமும் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் தப்பித்துவிட்டார்கள் என புது குண்டு ஒன்றை தூக்கிப்போட்டுள்ளார் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், சினிமாத்துறையினை சார்ந்த பலருக்கு இதில் தொடர்பு உள்ளதா? சினிமாத்துறையில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து குமுதம் ரிப்போர்ட்டர் யூடியூப்பில் நமது நிரூபர் பின்னணி பாடகி சுசித்ராவுடன் நேர்காணல் மேற்கொண்டார்.
நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பின்னணி பாடகி சுசித்ரா அளித்த தகவல்கள் பின்வருமாறு- "சினிமா என்றாலே கெட்டபழக்கங்கள் இருக்கும். அந்த களமே அப்படித்தான். கௌரவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்துவரும் பெண்கள் டிரக்ஸ் கொண்டுவருவார்கள். அவர்கள் நடிப்புக்காக மட்டும் வருவதில்லை. பத்து விஷயங்களை செய்துவிட்டு, பத்துவித வருவாயுடன்தான் செல்வார்கள்.
நல்ல பார்ட்டிகளில்கூட இந்த கலாசாரம் வந்துவிட்டது. நாம் யூஸ் பண்ணவில்லை என்றால் கோழை என்பார்கள். சென்னையில் எல்லா பப், கிளப்பிலும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. பாத்ரூமில் சென்று ஒரு ரவுண்ட் கொகைன் அடிக்க 30 விநாடிகள்கூட ஆகாது. கொகைன் போன்ற போதைப்பொருள் எடுத்துக் கொள்வதால் மறுதினம் ஷூட்டிங் பாதிக்கப்படுகிறது. இதனால், எத்தனையோ தயாரிப்பாளர்கள் இவர்களுக்கெல்லாம் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், மதிப்பதில்லை.
கிருஷ்ணாவுக்கு முன்பெல்லாம் இந்த பழக்கம் கிடையாது. இடையில் எப்போதாவதுதான் வந்திருக்க வேண்டும். நடிகைகளும் போதைப்பொருள் எடுக்கும் கலாச்சாரத்தில் இருக்கலாம். ஆண்கள் அளவுக்கு கேர்லெஸாக இருக்கமாட்டார்கள். ஒருசிலர் கேர்லெஸாக இருந்திருக்கிறார்கள். அப்படி சர்ச்சையில் மாட்டியதுதான் கயாடு லோஹர் எல்லாம். பல செலிபிரிட்டிகள், சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார்கள். ஆனால், ஸ்ரீகாந்த் மக்குபோல மாட்டிக்கொண்டார். விஷாலுக்கு மேடையில் கைநடுங்குவது அனைவர் கண்ணுக்கும் பட்டது. கூவாகம் சென்று அவர் மயங்கி விழுந்ததை எல்லோரும் கவனித்தார்கள். ஆனால், ரசிகர்களே அவருக்கு உடல்நிலை சரியில்லை என கடந்துசெல்கிறார்கள்.
திரை நட்சத்திரங்கள் மேடைகளில் நடந்து கொள்ளும் விதத்தை உன்னிப்பாக கவனித்தாலே நீங்கள் யார் யார் போதை பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்யலாம்” என்றார். பிரபல பின்னணி பாடகி சுசித்ரா வழங்கிய நேர்காணலை காண்க..
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், சினிமாத்துறையினை சார்ந்த பலருக்கு இதில் தொடர்பு உள்ளதா? சினிமாத்துறையில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து குமுதம் ரிப்போர்ட்டர் யூடியூப்பில் நமது நிரூபர் பின்னணி பாடகி சுசித்ராவுடன் நேர்காணல் மேற்கொண்டார்.
நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பின்னணி பாடகி சுசித்ரா அளித்த தகவல்கள் பின்வருமாறு- "சினிமா என்றாலே கெட்டபழக்கங்கள் இருக்கும். அந்த களமே அப்படித்தான். கௌரவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்துவரும் பெண்கள் டிரக்ஸ் கொண்டுவருவார்கள். அவர்கள் நடிப்புக்காக மட்டும் வருவதில்லை. பத்து விஷயங்களை செய்துவிட்டு, பத்துவித வருவாயுடன்தான் செல்வார்கள்.
நல்ல பார்ட்டிகளில்கூட இந்த கலாசாரம் வந்துவிட்டது. நாம் யூஸ் பண்ணவில்லை என்றால் கோழை என்பார்கள். சென்னையில் எல்லா பப், கிளப்பிலும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. பாத்ரூமில் சென்று ஒரு ரவுண்ட் கொகைன் அடிக்க 30 விநாடிகள்கூட ஆகாது. கொகைன் போன்ற போதைப்பொருள் எடுத்துக் கொள்வதால் மறுதினம் ஷூட்டிங் பாதிக்கப்படுகிறது. இதனால், எத்தனையோ தயாரிப்பாளர்கள் இவர்களுக்கெல்லாம் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், மதிப்பதில்லை.
கிருஷ்ணாவுக்கு முன்பெல்லாம் இந்த பழக்கம் கிடையாது. இடையில் எப்போதாவதுதான் வந்திருக்க வேண்டும். நடிகைகளும் போதைப்பொருள் எடுக்கும் கலாச்சாரத்தில் இருக்கலாம். ஆண்கள் அளவுக்கு கேர்லெஸாக இருக்கமாட்டார்கள். ஒருசிலர் கேர்லெஸாக இருந்திருக்கிறார்கள். அப்படி சர்ச்சையில் மாட்டியதுதான் கயாடு லோஹர் எல்லாம். பல செலிபிரிட்டிகள், சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார்கள். ஆனால், ஸ்ரீகாந்த் மக்குபோல மாட்டிக்கொண்டார். விஷாலுக்கு மேடையில் கைநடுங்குவது அனைவர் கண்ணுக்கும் பட்டது. கூவாகம் சென்று அவர் மயங்கி விழுந்ததை எல்லோரும் கவனித்தார்கள். ஆனால், ரசிகர்களே அவருக்கு உடல்நிலை சரியில்லை என கடந்துசெல்கிறார்கள்.
திரை நட்சத்திரங்கள் மேடைகளில் நடந்து கொள்ளும் விதத்தை உன்னிப்பாக கவனித்தாலே நீங்கள் யார் யார் போதை பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்யலாம்” என்றார். பிரபல பின்னணி பாடகி சுசித்ரா வழங்கிய நேர்காணலை காண்க..