இந்தியா - பாகிஸ்தான் மோதல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.குறிப்பாக சிந்து நநி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லாகூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ கட்டடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சண்டை நிறுத்த ஒப்பந்தம்
இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்த சண்டையால் போர் ஏற்படும் சூழல் உருவானது. இருநாடுகளுக்கும் எல்லைகளில் ராணுவத்தினரை குவித்தனர். இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது போராக கருதப்படும் என இந்தியா இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இந்தியாவும் – பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில, “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
தாக்குதலை நிறுத்த உத்தரவு
இதைத்தொடர்ந்து, சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் மத்திய அரசு தரப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதி பிற்பகலில் மீண்டும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ அதிகாரிகள், முப்படைகளும் தாக்குதலை தாக்குதலை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்த செயலையும் தடுக்க ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக மதமோதல்களை தூண்டும் வகையில் செயல்பட்டது.
பொய் செய்தியை பரப்பியது
இந்தியா எப்போதும் எந்த மதத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதில்லை. மேலும், இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியது. தாக்குதல் நடைபெற்றபோது, பாகிஸ்தான் ஏராளமான பொய் தகவல்களை பரப்பியது. திட்டமிட்டே தங்களது பதிலடி இருந்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.குறிப்பாக சிந்து நநி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லாகூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ராணுவ கட்டடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சண்டை நிறுத்த ஒப்பந்தம்
இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 3 நாட்களாக நடந்து வந்த சண்டையால் போர் ஏற்படும் சூழல் உருவானது. இருநாடுகளுக்கும் எல்லைகளில் ராணுவத்தினரை குவித்தனர். இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது போராக கருதப்படும் என இந்தியா இறுதி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இந்தியாவும் – பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில, “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
தாக்குதலை நிறுத்த உத்தரவு
இதைத்தொடர்ந்து, சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் மத்திய அரசு தரப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதி பிற்பகலில் மீண்டும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ அதிகாரிகள், முப்படைகளும் தாக்குதலை தாக்குதலை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்த செயலையும் தடுக்க ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக மதமோதல்களை தூண்டும் வகையில் செயல்பட்டது.
பொய் செய்தியை பரப்பியது
இந்தியா எப்போதும் எந்த மதத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதில்லை. மேலும், இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. பாகிஸ்தான் இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியது. தாக்குதல் நடைபெற்றபோது, பாகிஸ்தான் ஏராளமான பொய் தகவல்களை பரப்பியது. திட்டமிட்டே தங்களது பதிலடி இருந்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.