முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் விமர்சனங்களுக்கு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவின் குற்றச்சாட்டுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெளியான செய்தி, "பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும் தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், மாநில முதலமைச்சரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று "ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
இதற்குப் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா?" என்று வினவினார்.
முதலமைச்சர் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களில் ஒன்றான Knorr-Bremse நிறுவனம் குறித்து விளக்கம் அளித்த அவர், "Knorr-Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திமுக அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் மட்டுமே தொடங்கப்பட்டது. தற்போது ரூ.2,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முதலீட்டு ஒப்பீடு
மகாராஷ்டிரா முதலமைச்சர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என பாஜக தலைவர் ஒப்பிட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "டாவோஸ் நகரிலிருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன், அதுவும் அவர்களது தலைநகரான மும்பையிலேயே உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தோடு காணொலி மூலம் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோஸில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் காணொலி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும். திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்வதில்லை" என்று கூறினார்.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பாஜக தலைமையிலான மத்திய அரசே சான்றிதழ் தந்துள்ள நிலையில், "தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிய முயற்சிக்குமாறு தமிழ்நாடு பாஜக தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் குற்றச்சாட்டுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெளியான செய்தி, "பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும் தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், மாநில முதலமைச்சரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்று "ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி
இதற்குப் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா?" என்று வினவினார்.
முதலமைச்சர் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களில் ஒன்றான Knorr-Bremse நிறுவனம் குறித்து விளக்கம் அளித்த அவர், "Knorr-Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திமுக அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் மட்டுமே தொடங்கப்பட்டது. தற்போது ரூ.2,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முதலீட்டு ஒப்பீடு
மகாராஷ்டிரா முதலமைச்சர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என பாஜக தலைவர் ஒப்பிட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "டாவோஸ் நகரிலிருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன், அதுவும் அவர்களது தலைநகரான மும்பையிலேயே உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தோடு காணொலி மூலம் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோஸில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் காணொலி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும். திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்வதில்லை" என்று கூறினார்.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பாஜக தலைமையிலான மத்திய அரசே சான்றிதழ் தந்துள்ள நிலையில், "தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கைக் கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிய முயற்சிக்குமாறு தமிழ்நாடு பாஜக தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.