சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற அஸ்வின் பொதுவாகவே களத்தில் கட்டுக்கோப்பாக இருப்பார். ஆனால், தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் நிதானத்தை இழந்து ஆக்ரோஷமாக செயல்பட்டது முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (08.06.2025) தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே தங்களிடமிருந்து இரண்டு ரிவ்யூ ஆப்ஷன்களையும் வீணடித்தது திண்டுக்கல் அணி. இந்நிலையில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளோடு 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் கிஷோர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகினார் அஸ்வின்.
ஏற்கெனவே 2 ரிவ்யூகளையும் இழந்திருந்த காரணத்தினால், அவுட் கொடுக்கப்பட்ட போது அஸ்வினால் மேற்கொண்டு அப்பீல் செய்ய முடியவில்லை. பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருக்க வேண்டும் என்று அஷ்வின் கருதினார். இதனால் அவுட் கொடுத்த பெண் நடுவரான கீர்த்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பிய அஷ்வின், கோபத்தில் தனது பேட்டை பேடில் ஓங்கி அடித்தார். மேலும், கிளவுஸை தூக்கி பெவிலியின் திசை நோக்கி எறிந்தார். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போட்டியில் திருப்பூர் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 16.2 ஓவரில் வெறும் 93 ரன்களுக்கு சுருட்டினர். திண்டுக்கல் அணியில் ஷிவம் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். திருப்பூரின் பந்துவீச்சாளர்களில் எசாக்கிமுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
94 ரன்கள் என்றான எளிதான இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹேஜா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால், 11.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
38 வயதான அஷ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற நிலையில், டி20 லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என அவர் மீது விமர்சனம் எழுந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (08.06.2025) தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் மற்றும் சிவம் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே தங்களிடமிருந்து இரண்டு ரிவ்யூ ஆப்ஷன்களையும் வீணடித்தது திண்டுக்கல் அணி. இந்நிலையில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளோடு 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் கிஷோர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகினார் அஸ்வின்.
ஏற்கெனவே 2 ரிவ்யூகளையும் இழந்திருந்த காரணத்தினால், அவுட் கொடுக்கப்பட்ட போது அஸ்வினால் மேற்கொண்டு அப்பீல் செய்ய முடியவில்லை. பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருக்க வேண்டும் என்று அஷ்வின் கருதினார். இதனால் அவுட் கொடுத்த பெண் நடுவரான கீர்த்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பிய அஷ்வின், கோபத்தில் தனது பேட்டை பேடில் ஓங்கி அடித்தார். மேலும், கிளவுஸை தூக்கி பெவிலியின் திசை நோக்கி எறிந்தார். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Ashwin nah, atleast give some respect to TNPL League 🙃 pic.twitter.com/tXXb2rrx3w
— Prakash (@definitelynot05) June 9, 2025
இந்த போட்டியில் திருப்பூர் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 16.2 ஓவரில் வெறும் 93 ரன்களுக்கு சுருட்டினர். திண்டுக்கல் அணியில் ஷிவம் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். திருப்பூரின் பந்துவீச்சாளர்களில் எசாக்கிமுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
94 ரன்கள் என்றான எளிதான இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹேஜா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். இதனால், 11.5 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
38 வயதான அஷ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற நிலையில், டி20 லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என அவர் மீது விமர்சனம் எழுந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.