நடிகர் அஜ்மல் ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் தமிழில் தனக்கென அடையாளத்தை பெற்றார். இதைத்தொடர்ந்து கோ, வெற்றிச்செல்வன், நெற்றிக்கண் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிஸிக்கல் அல்லது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்ட்
இறுதியாக நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் அஜ்மல் மீது நடிகர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தமிழில் ’சினம்கொள்’, ‘உயிர்வரை இனித்தாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நர்வினி டெரி ரவிசங்கர். இவர் திரையுலகில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து வீடியோவில் பேசி உள்ளார். அதில், “ ஒரு இயக்குநர் என்பவர் தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். அவர் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களிடம் மரியாதையாக பேச வேண்டும். ஆனால் இங்கு சிலர் பிஸிக்கல் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் முன்னதாக மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்டை எதிர்பார்க்கின்றனர்.
அதாவது போன் செய்தோ, அல்லது மெசேஜ் செய்தோ ‘பேபி’, ‘செல்லம்’ என சொல்வது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்ட். இதுபோன்ற விஷயங்கள் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இது போன்ற பிஸிக்கல் அல்லது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு நான் ஒருபோது தயாராக இல்லை.
என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார்
எனது தொடர்பில் உள்ள அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பினேன். அதில் இயக்குநர் டி.ஆர்.பாலா மட்டும் எனக்கு போன் செய்து, ‘எனக்கு இதுபோல் மெசேஸ் செய்தால், என் மனைவி என்னை பற்றி என்ன நினைப்பார்? என கேள்வி எழுப்பினார்.
இதேபோல் எனது நண்பருடன் மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன், அவர் என்னிடம் வந்து, நான் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா? என கேட்டார். மறுநாள் ஆடிஷனுக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மேலும் அவருடன் டான்ஸ் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான் முடியாது என்றேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ காலிங்பெல் அழுத்தினர்.
போலீசில் புகார் அளிக்க நினைத்தேன்
அப்போது அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடிவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டிருக்கக்கூடாது. ஆனால் அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார். நடிகர் அஜ்மல் மீது நடிகை தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிஸிக்கல் அல்லது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்ட்
இறுதியாக நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் அஜ்மல் மீது நடிகர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தமிழில் ’சினம்கொள்’, ‘உயிர்வரை இனித்தாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நர்வினி டெரி ரவிசங்கர். இவர் திரையுலகில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து வீடியோவில் பேசி உள்ளார். அதில், “ ஒரு இயக்குநர் என்பவர் தான் கேப்டன் ஆஃப் தி ஷிப். அவர் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்களிடம் மரியாதையாக பேச வேண்டும். ஆனால் இங்கு சிலர் பிஸிக்கல் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் முன்னதாக மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்டை எதிர்பார்க்கின்றனர்.
அதாவது போன் செய்தோ, அல்லது மெசேஜ் செய்தோ ‘பேபி’, ‘செல்லம்’ என சொல்வது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்ட். இதுபோன்ற விஷயங்கள் எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இது போன்ற பிஸிக்கல் அல்லது மெண்டல் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு நான் ஒருபோது தயாராக இல்லை.
என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார்
எனது தொடர்பில் உள்ள அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும் மெசேஜ் அனுப்பினேன். அதில் இயக்குநர் டி.ஆர்.பாலா மட்டும் எனக்கு போன் செய்து, ‘எனக்கு இதுபோல் மெசேஸ் செய்தால், என் மனைவி என்னை பற்றி என்ன நினைப்பார்? என கேள்வி எழுப்பினார்.
இதேபோல் எனது நண்பருடன் மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன், அவர் என்னிடம் வந்து, நான் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா? என கேட்டார். மறுநாள் ஆடிஷனுக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மேலும் அவருடன் டான்ஸ் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான் முடியாது என்றேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ காலிங்பெல் அழுத்தினர்.
போலீசில் புகார் அளிக்க நினைத்தேன்
அப்போது அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடிவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டிருக்கக்கூடாது. ஆனால் அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன்.அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார். நடிகர் அஜ்மல் மீது நடிகை தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.