தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் போது, மைதானத்திற்கு வருகைத்தந்த முன்னாள் சிஎஸ்கே வீரரும், வர்ணனையாளருமான எஸ்.பத்ரிநாத்தை நோக்கி ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பத்ரிநாத் சர்வதேச போட்டிகளில் குறைவாக விளையாடியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் 95 போட்டிகள் வரை விளையாடியுள்ளார். பத்ரிநாத் 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் CSK அணிக்காக, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களில் விளையாடியுள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கும் பத்ரிநாத் நங்கூரமாக நின்று சில மேட்சுகளை தனி ஆளாகவும் வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 1441 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்களும் அடங்கும்.
ஆர்சிபி ரசிகர்கள் vs பத்ரிநாத்: என்ன பிரச்னை?
அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தமிழ் வர்ணனையாளராக புதிய அத்தியாயத்தை தொடங்கினார் பத்ரிநாத். அப்போது ஆரம்பித்தது பத்ரிநாத்- ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையேயான பஞ்சாயத்து என்றே சொல்லலாம். வர்ணனை செய்யும் போதும், போட்டிகள் குறித்து விவாதிக்கும் போதும் ஆர்சிபி அணியினை ரொம்ப குறைவாக எடைபோட்டு பேசுவார். இதனால், ஆர்சிபி ரசிகர்கள் பத்ரிநாத்தை அதிகமாக விமர்சிக்க தொடங்கினர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 18 வது சீசனிலும், இவர் பெங்களூரு ரசிகர்களை தனது வார்த்தைகளால் சீண்டிப்பார்த்தார். சென்னைக்கு எதிரான போட்டியின் போது, யார் வெற்றி பெறுவார்கள்? என இவரிடம் கேள்வி எழுப்புவார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு, ”சென்னைக்கு எப்போதும் எளிதான அணி என்றால், அது பெங்களூர் தான். எத்தனை முறை ஆர்சிபி அணியினை பொளந்து இருக்காங்க” என நக்கல் தொனியில் பதிலளிப்பார்.
அந்த போட்டியில் ஆர்சிபி வென்றது மட்டுமின்றி, முதல் முறையாக ஐபிஎல் தொடரையும் வென்று அசத்தியது. அன்று முதலே, பத்ரிநாத்தின் சமூக வலைத்தள பக்கங்களை டேக் செய்து வம்பு இழுக்கத் தொடங்கினர் ஆர்சிபி ரசிகர்கள்.
ஆர்சிபி எனது பேவரைட் அணி: பத்ரிநாத்
இந்நிலையில் தான் தற்போது நடைப்பெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், மேட்ச் பார்க்க வந்த ஆர்சிபி ரசிகர்கள் பத்ரிநாத்தை நோக்கி "RCB, RCB" என உரத்த குரலில் கோஷமிட்டு கிண்டல் செய்தனர். RCB கொடியையும் அவரது கண் முன் ஆட்டி கிண்டலடித்தனர்.
பொதுவாக இதுப்போன்ற சந்தர்ப்பங்களில் சிலர் கோபப்படவோ அல்லது அசௌகரியப்படவோ கூடும். ஆனால், பத்ரிநாத் முதிர்ச்சித் தன்மையோடு, ரசிகர்களின் கோஷத்தை கேட்டுப் புன்னகைத்தார். மேலும், அவர்களை நோக்கி 'தம்ஸ் அப்' (thumbs up) சைகை காட்டி பதிலளித்தார். இதுத்தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பத்ரிநாத், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒரு ரேபிட்பயர் வினாக்களை எதிர்கொண்டார். அப்போது சென்னைக்கு அடுத்தப்படியாக எந்த அணி பிடிக்கும்? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது பெங்களூரு என பதிலளித்தார். இதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியதற்கு.. நான் ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற இரண்டாவது அணி பெங்களூரு தான். ஆர்சிபி அணிக்காக விளையாடவில்லை என்றாலும், அணியில் ஒருவனாக இருந்துள்ளேன் என பதிலளித்திருப்பார் பத்ரிநாத். இந்த காணொளியும் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பத்ரிநாத் சர்வதேச போட்டிகளில் குறைவாக விளையாடியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் 95 போட்டிகள் வரை விளையாடியுள்ளார். பத்ரிநாத் 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் CSK அணிக்காக, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களில் விளையாடியுள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கும் பத்ரிநாத் நங்கூரமாக நின்று சில மேட்சுகளை தனி ஆளாகவும் வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 1441 ரன்கள் குவித்துள்ளார். இதில் 11 அரைசதங்களும் அடங்கும்.
ஆர்சிபி ரசிகர்கள் vs பத்ரிநாத்: என்ன பிரச்னை?
அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தமிழ் வர்ணனையாளராக புதிய அத்தியாயத்தை தொடங்கினார் பத்ரிநாத். அப்போது ஆரம்பித்தது பத்ரிநாத்- ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையேயான பஞ்சாயத்து என்றே சொல்லலாம். வர்ணனை செய்யும் போதும், போட்டிகள் குறித்து விவாதிக்கும் போதும் ஆர்சிபி அணியினை ரொம்ப குறைவாக எடைபோட்டு பேசுவார். இதனால், ஆர்சிபி ரசிகர்கள் பத்ரிநாத்தை அதிகமாக விமர்சிக்க தொடங்கினர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 18 வது சீசனிலும், இவர் பெங்களூரு ரசிகர்களை தனது வார்த்தைகளால் சீண்டிப்பார்த்தார். சென்னைக்கு எதிரான போட்டியின் போது, யார் வெற்றி பெறுவார்கள்? என இவரிடம் கேள்வி எழுப்புவார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு, ”சென்னைக்கு எப்போதும் எளிதான அணி என்றால், அது பெங்களூர் தான். எத்தனை முறை ஆர்சிபி அணியினை பொளந்து இருக்காங்க” என நக்கல் தொனியில் பதிலளிப்பார்.
அந்த போட்டியில் ஆர்சிபி வென்றது மட்டுமின்றி, முதல் முறையாக ஐபிஎல் தொடரையும் வென்று அசத்தியது. அன்று முதலே, பத்ரிநாத்தின் சமூக வலைத்தள பக்கங்களை டேக் செய்து வம்பு இழுக்கத் தொடங்கினர் ஆர்சிபி ரசிகர்கள்.
Here's the video of his humiliation.😂🤣 https://t.co/ePQ2crclkX pic.twitter.com/HmDbYRROMz
— ꪜ𝐢𝐧𝐨 (@vinoo_96) June 10, 2025
ஆர்சிபி எனது பேவரைட் அணி: பத்ரிநாத்
இந்நிலையில் தான் தற்போது நடைப்பெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், மேட்ச் பார்க்க வந்த ஆர்சிபி ரசிகர்கள் பத்ரிநாத்தை நோக்கி "RCB, RCB" என உரத்த குரலில் கோஷமிட்டு கிண்டல் செய்தனர். RCB கொடியையும் அவரது கண் முன் ஆட்டி கிண்டலடித்தனர்.
பொதுவாக இதுப்போன்ற சந்தர்ப்பங்களில் சிலர் கோபப்படவோ அல்லது அசௌகரியப்படவோ கூடும். ஆனால், பத்ரிநாத் முதிர்ச்சித் தன்மையோடு, ரசிகர்களின் கோஷத்தை கேட்டுப் புன்னகைத்தார். மேலும், அவர்களை நோக்கி 'தம்ஸ் அப்' (thumbs up) சைகை காட்டி பதிலளித்தார். இதுத்தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பத்ரிநாத், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒரு ரேபிட்பயர் வினாக்களை எதிர்கொண்டார். அப்போது சென்னைக்கு அடுத்தப்படியாக எந்த அணி பிடிக்கும்? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது பெங்களூரு என பதிலளித்தார். இதற்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியதற்கு.. நான் ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற இரண்டாவது அணி பெங்களூரு தான். ஆர்சிபி அணிக்காக விளையாடவில்லை என்றாலும், அணியில் ஒருவனாக இருந்துள்ளேன் என பதிலளித்திருப்பார் பத்ரிநாத். இந்த காணொளியும் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.