தமிழ்நாடு

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 6.88 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை  ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது
அமெரிக்க டாலரில் முதலீடு அதிக லாபம் என ஆசைவார்த்தை ரூ.6.88 லட்சம் மோசடி... 2 பேர் கைது
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தகோபால். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 07.03.2024ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து Happen என்ற Chatting ஆப் மூலமாக அறிமுகமான தீபிகா என்பவரின் @deepikaarulsan என்ற டெலிகிராம் ஐடியில் சாட்டிங் செய்ததாக தெரிகிறது.

RTGC siteல் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபத்தினை பெறலாம் என்று கூறியதை நம்பி தான் வெப்சைட்டில் தனது SBI வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,41,557 பணமும், Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.5,50,000 பணமும் என மொத்தம் ரூ.6,88,337 பணம் முதலீடு செய்துள்ளார். தான் டாலரில் செய்த முதலீட்டினை திரும்ப பெற மீண்டும் ரூ.7,62,189 செலுத்த வேண்டும் என்று கூறியபோது தான் ஏமாற்றப்பட்டதை நந்தகோபாலுக்கு தெரிந்தது.

ஏமாற்றப்பட்டது குறித்து நந்த கோபால், வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மோசடி நபரின் பயன்படுத்திய வங்கிக் கணக்கு விபரங்கள் Mail ID, Phone Number, ஆகியவற்றின் IP விவரங்கள் மற்றும் அதன் Network User ID முகவரி ஆகியவற்றை பெற்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த சீத்தாராமன், செந்தில்நாதன் ஆகிய 2 பேரை நேற்று (03.06.2025) கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் கைது செய்தனர். இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (03.06.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.