இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலில், அமெரிக்கா திடீரென ஈரான் மீது ஏவுக்குகணை கொண்டு தாக்கியது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சூழலில், கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார், ஐக்கிய அமீரகம், பக்ரைன் நாடுகள் தங்கள் வான்வழியை முழுவதுமாக மூடியது.
மத்திய கிழக்கில் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டதை அடுத்து, விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தார் நாட்டை தலைமையகமாக வைத்து இயங்கிக் கொண்டு இருக்கும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மறு உத்தரவு வரும் வரை, தங்களுடைய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை அடுத்து, சென்னையில் இருந்து நேற்று இரவு 11 மணிக்கு குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11:45 மணிக்கு, மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1:00 மணிக்கு அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 3:55 மணிக்கு தோகா (கத்தார்) செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 4:20 மணிக்கு தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், காலை 6:35 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னைக்கு வரும் விமானங்கள், தோகாவில் இருந்து இன்று அதிகாலை 2:50 மணிக்கு சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 2:50 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 6:55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10:20 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10:25 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இடையே மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், தாய்லாந்து நாட்டில் இருந்து தோகாவுக்கு சென்று கொண்டிருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள், இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையில் வந்து தரை இறங்கின. மேலும், பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
மேலும் லண்டன், பக்ரைன், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படுகிறது? எப்போது வருகிறது? என்பதை, அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டதை அடுத்து, விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தார் நாட்டை தலைமையகமாக வைத்து இயங்கிக் கொண்டு இருக்கும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மறு உத்தரவு வரும் வரை, தங்களுடைய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை அடுத்து, சென்னையில் இருந்து நேற்று இரவு 11 மணிக்கு குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11:45 மணிக்கு, மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1:00 மணிக்கு அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 3:55 மணிக்கு தோகா (கத்தார்) செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 4:20 மணிக்கு தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், காலை 6:35 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னைக்கு வரும் விமானங்கள், தோகாவில் இருந்து இன்று அதிகாலை 2:50 மணிக்கு சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 2:50 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 6:55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10:20 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10:25 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இடையே மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், தாய்லாந்து நாட்டில் இருந்து தோகாவுக்கு சென்று கொண்டிருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள், இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையில் வந்து தரை இறங்கின. மேலும், பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
மேலும் லண்டன், பக்ரைன், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படுகிறது? எப்போது வருகிறது? என்பதை, அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.