தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.6.2025) தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி. குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
வரலாற்றில் இடம்பிடித்த முதல்வர்:
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததை தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது.
தற்போது அனைத்து உப ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில், காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், கல்லணைக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர்பங்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் (2025-2026) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றிலுள்ள ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 98.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 5021.74 கி.மீ நீளத்திற்கு திட்ட நிதியின் கீழ் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது.
மேலும், கல்லணை தலைப்பில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி. வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யவும், சம்பா சாகுபடிக்கான தொடக்கப்பணிகளை செய்யவும். சுமார் 13.00 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறவுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இடம்பிடித்த முதல்வர்:
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததை தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது.
தற்போது அனைத்து உப ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில், காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், கல்லணைக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர்பங்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் (2025-2026) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றிலுள்ள ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 98.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 5021.74 கி.மீ நீளத்திற்கு திட்ட நிதியின் கீழ் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது.
மேலும், கல்லணை தலைப்பில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி. வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யவும், சம்பா சாகுபடிக்கான தொடக்கப்பணிகளை செய்யவும். சுமார் 13.00 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறவுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.